திருச்சி: திருச்சியில் பணியாற்றி வரும் சிறைக் காவலர்கள் 37 பேருக்கு விருப்பத்தின் பேரில் மதுரை, தேனிக்கு பணியிட மாறுதல் வழங்கப்பட்டுள்ளது. இதனைக் கொண்டாடும் வகையில் சிலர் மது அருந்தியுள்ளனர். இருசக்கர வாகனத்தில் 3, 4 பேர் அமர்ந்தபடி கூச்சலிட்டபடி குடியிருப்பு வளாகத்தில் சுற்றியுள்ளனர். இது குடியிருப்பு வாசிகளான சக சிறைக் காவலர்களின் குடும்பத்தினருக்கு இடையூறாக இருந்துள்ளது.