டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க இருந்த ஹாக்கி வீரர்கள், வீராங்கனைகள், தடகள வீரர்கள் என 30 பேர் பெங்களூருவில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய (சாய்) சிறப்பு மையத்தில் தங்கி பயிற்சி பெற்று வந்தனர். இந்நிலையில் இந்த மையத்தின் சமையல்காரர் ஒருவர் 2 நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். பிரேத பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டிருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.