டெல்லி: சிறப்பு ரயில்களில் முன்பதிவு செய்ய ஏதுவாக, தற்போது இயக்கப்படும் மற்றும் ஜூன் 1 ம் தேதி முதல் இயக்கப்படவிருக்கும் ரயில்களுக்கான முன்பதிவு நாளை (22-05-2020) காலை 8 மணிமுதல் குறிப்பிட்ட மையங்களில் மட்டுமே நடைபெறும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. திருவனந்தபுரம், எர்ணாகுளம், கோழிக்கோடு, மங்களூர் மற்றும் சென்னை சென்ட்ரல் ஆகிய ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்களில் மட்டும் குறைந்தபட்சம் 2 கவுண்டர்கள் கொண்டு செயல்படும் என்று அறிவித்துள்ளது.