மாநிலங்கள் பொதுத்தேர்வுகள் நடத்த தடையில்லை: மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி: மாநிலங்கள் பொதுத்தேர்வுகள் நடத்த தடையில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. சில நிபந்தனைகளுடன் தேர்வுகளை நடத்திக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா தகவல் தெரிவித்துள்ளார். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். தேர்வு நடைபெறும் மையங்களில் கிருமி நாசினி தெளித்து சுத்தமாக பராமரிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: