ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே வடமங்கலம், அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (37). இவரது மனைவி துளசி (33). இருவரும் சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்தனர். இவர்களுக்கு ராஜேஸ்வரி (12), ஷாலினி (10) என்ற மகள்களும் சேதுராமன் (8) என்ற மகனும் இருந்தனர். இவர்கள் வடமங்கலம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் துளசி வேலைக்கு சென்றார். ஆறுமுகம் வீட்டில் இருந்தார். மாலையில் வேலை முடிந்து துளசி வீடு திரும்பினர். அப்போது, வீட்டில் உள்ள மின்விசிறியில் மகள் ராஜேஸ்வரி சடலமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். மற்ற குழந்தைகள் மற்றும் கணவனை தேடியபோது, வீட்டின் அருகில் உள்ள வயல்வெளியில் ஆறுமுகத்தின் பைக் அனாதையாக நின்றது.