மதுரை: மதுரையில் கிராம பகுதிகளில் சலூன் கடைகள் திறக்கப்பட்டன. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக 144 தடை உத்தரவு கடந்த மார்ச் 24ம் தேதி முதல் அமலில் உள்ளது. 4ம் கட்ட ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட போது, மாவட்ட நிர்வாகம் பல்வேறு தளர்வுகளை வெளியிட்டது. அதில், மாவட்டத்தில் கிராம மற்றும் ஊரக பகுதிகளில் சலூன் கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டது. ‘அதன்படி, கிராம பகுதிகளில் உள்ள 500க்கும் மேற்பட்ட சலூன் கடைகள் திறக்கப்பட்டன. அதே நேரத்தில் மாநகராட்சி உள்ளிட்ட நகர் பகுதிகளில் சலூன் கடைகள் திறக்க அனுமதில்லை. மேலும் சலூன் கடைக்காரர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.