வாஷிங்டன் : கோடை காலத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருக்கும் என்று கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை என அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. கோடை காலத்தில் கொரோனாவின் தாக்கம் குறையும் என்றும் வெயில் மூலம் வரும் புற ஊதா கதிர்கள் கொரோனாவை கட்டுப்படுத்தும் என்றும் பரவலாக ஒரு தகவல்கள் உலகம் முழுவதும் உலாவி வந்தன. காற்று மற்றும் நிலப்பரப்பில் இருக்கும் கொரோனவை சூரிய ஒளி கொல்கிறது என்றும் அதோடு வெயிலின் தாக்கம் காரணமாக கொரோனா பரவும் வேகம் பெரிய அளவில் குறையும் என்றும் செய்திகள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தன.