பெயின்ட் கடையில் தீ விபத்து: 4 சிறுவர்கள் 3 பெண்கள் பலி

குவாலியர்: மத்தியப் பிரதேச மாநிலம், குவாலியரில் இந்தர்கன்ஜ் பகுதியில் கட்டிடத்தின் கீழ்தளத்தில் பெயின்ட் கடை இயங்கி வந்தது. முதல் மற்றும் இரண்டாவது தளத்தில் கடை உரிமையாளர்களின் குடும்பங்கள் வசித்து வந்தன. இந்நிலையில் நேற்று காலை சுமார் 10 மணியளவில் பெயின்ட் கடையில் திடீரென தீப்பிடித்தது. இதனால் கடையில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த பல லிட்டர் பெயின்ட் கேன்கள் தீ்ப்பிடித்து எரியத்தொடங்கியது. மளமளவென பரவிய தீ முதல் மற்றும் இரண்டாவது தளங்களிலும் பரவியது.

தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் இரண்டு குடும்பங்களை சேர்ந்த 4 சிறுவர்கள், 3 பெண்கள் பலத்த தீக்காயங்களுடன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் கவலைக்கிடமான நிலையில் 4 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Related Stories: