குவாலியர்: மத்தியப் பிரதேச மாநிலம், குவாலியரில் இந்தர்கன்ஜ் பகுதியில் கட்டிடத்தின் கீழ்தளத்தில் பெயின்ட் கடை இயங்கி வந்தது. முதல் மற்றும் இரண்டாவது தளத்தில் கடை உரிமையாளர்களின் குடும்பங்கள் வசித்து வந்தன. இந்நிலையில் நேற்று காலை சுமார் 10 மணியளவில் பெயின்ட் கடையில் திடீரென தீப்பிடித்தது. இதனால் கடையில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த பல லிட்டர் பெயின்ட் கேன்கள் தீ்ப்பிடித்து எரியத்தொடங்கியது. மளமளவென பரவிய தீ முதல் மற்றும் இரண்டாவது தளங்களிலும் பரவியது.