தனது பணியாளர்களுக்கு மே மாதம் வரை சம்பளம் கொடுத்து விடுமுறை அளித்த பிரகாஷ்ராஜ், தனது பண்ணை வீட்டில் கூலிப் பணியாளர்களை தங்க வைத்தார். அவர்கள் குடும்பத்துக்கு பண உதவி செய்தார். நலிந்த குடும்பங்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள் வழங்கினார். தற்போது புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பலரும் தங்கள் சொந்த ஊருக்கு நடந்தே செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பான போட்டோக்கள், வீடியோக்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. நடந்து செல்பவர்களுக்கு பிரகாஷ்ராஜ் உணவு, தண்ணீர் போன்றவற்றை வழங்க ஏற்பாடு செய்துள்ளார்.