திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 18 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 546 ஆக உயர்ந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 528 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், நேற்று ஒரே நாளில் மாவட்டத்தில் பூந்தமல்லி, திருவேற்காடு நகராட்சி உட்பட பல ஒன்றியங்களில் மொத்தம் 18 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.