கொரோ வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக 4வது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் நடுத்தர மக்கள் தாங்கள் வளர்க்கும் செல்லப் பிராணிகளை பராமரிக்க முடியாமல் கைவிடத் தொடங்கி உள்ளனர். இந்த நிலையில் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் ஒரு படத்தை வெளியிட்டுள்ளார். அந்தப் படத்தில் ஒரு புலம்பெயர்ந்த குடும்பத்தினர் நடந்தே சொந்த ஊருக்கே செல்லும்போது தங்களுடன் தாங்கள் வளர்க்கும் நாயை கையில் பிடித்த படியும், வாத்தை கையில் சுமந்த படியும் கொண்டு செல்கிறார்கள்.