திண்டுக்கல்: திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளி திடீரென மாயமானார். தேடி கண்டுபிடித்தபோது, டீ குடிக்க வெளியே சென்றதாக கூறியுள்ளார். திண்டுக்கல் மாவட்டம், சித்தரேவு அருகே சிங்காரக்கோட்டை பகுதியை சேர்ந்த 45 வயது ஆண் ஒருவருக்கு சின்னாளபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.