சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் வக்கீல் ராம்குமார் ஆதித்தன் என்பவர் தொடர்ந்த வழக்கில், டாஸ்மாக் கடைகளில் மது வாங்குபவர்களுக்கு உரிய ரசீது அளிக்கப்படுவதில்லை. மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது. விற்பனை தடை செய்யப்பட்ட நாட்களில் பதுக்கப்பட்டு மிக அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் கள்ளச்சாராய விற்பனையும் நடக்கிறது. மாணவ, மாணவியர் கூட மது அருந்துவதை காண முடிகிறது. இதனை தவிர்க்க கள்ளச்சாராயம், சட்ட விரோத மது விற்பனை குறித்து புகார் அளிக்க தனி தொலைபேசி எண்ணை அறிவிக்க வேண்டும். மது விற்பனை செய்ய ஒரு மொபைல் ஆப் மற்றும் இணையதளம் ஆரம்பிக்க வேண்டும். மதுபான கடைகளில் ரொக்க விற்பனையை தடை செய்ய வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.