புதுடெல்லி: கொரோனா தொற்றினால் ஏற்பட்டுள்ள மனித, சமூக மற்றும் பொருளாதார இழப்புகளில் இருந்து இந்தியா விடுபட, பிரிக்ஸ் புதிய வளர்ச்சி வங்கி ரூ.7,535 கோடி கடன் அளித்துள்ளது. ஷாங்காயை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பிரிக்ஸ் புதிய வளர்ச்சி வங்கி கடந்த 2014ம் ஆண்டு இந்திய வங்கி தலைவர் கே.வி. காமத் தலைமையில் பிரிக்ஸ் நாடுகளின் அவசர தேவைக்கு உதவுவதற்காக தொடங்கப்பட்டது. இந்நிலையில், இந்த வங்கியின் துணைத் தலைவரும் தலைமை செயல் அதிகாரியுமான ஜியான் ஜூ நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: பிரிக்ஸ் புதிய வளர்ச்சி வங்கி அதன் உறுப்பினர் நாடுகளுக்கு பேரழிவின் போது உதவுதவற்காக அர்ப்பணித்துள்ளது.