அதிமுக மாஜி அமைச்சர் உள்பட 12 பேர் மீது வழக்கு

மொடக்குறிச்சி: ஈரோடு மாவட்டம் கொடுமுடி அடுத்த சோழக்காளிபாளையம் அண்ணா நகரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கொரோனா சிறப்பு கண்காணிப்பு முகாம் அமைக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 1ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், அதிமுக முன்னாள் அமைச்சர் பி.சி.ராமசாமியும் கலந்து கொண்டார். இந்தநிலையில், கொடுமுடி வருவாய் ஆய்வாளர் நிர்மலாதேவி, கொடுமுடி போலீசில், முன்னாள் அமைச்சர் உள்ளிட்டோர் கொரோனா தொற்று பரவும் வகையில் சமூக இடைவெளி இல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்று புகார் தெரிவித்திருந்தார். இதன்பேரில், பி.சி.ராமசாமி, அண்ணாநகரை சேர்ந்த பார்வதி, சரோஜா உள்பட 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related Stories: