தருமபுரி: தருமபுரி மாவட்டம் அரூர் அருகே தாக்கத்தால் தவிக்கும் குரங்குகள் ஒரு சொட்டு நீருக்காக அலைமோதுவது பார்ப்பவர்கள் மனதை உருக்குவதாக உள்ளது. தீர்த்தமலை கிராமத்தில் தீர்த்தமலை மீது அமைந்துள்ள தீர்த்த கிரீஸ்வரர் கோவிலுக்கு செல்லும் 2 கிலோ மீட்டர் நீல பாதையில் ஏராளமான குரங்குகள் தங்கியுள்ளன. வறட்சி காரணமாக மலையில் உள்ள தீர்த்தங்களில் தண்ணீர் குறைந்து விட்டதால் தாக்கத்தில் தவிக்கும் குரங்குகள் குழாய்களில் தண்ணீர் சொட்டுமா? என்று பார்ப்பதை வேலையாக கொண்டுள்ளன.