சென்னை: தமிழக டிஜிபி திரிபாதி நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: திருநெல்வேலி மாவட்ட நில அபகரிப்பு சிறப்பு பிரிவில் இருந்த முகேஷ் ஜெயகுமார் கரூர் சப் டிவிஷன் டிஎஸ்பியாகவும், கரூர் டவுன் சப் டிவிஷனில் இருந்த சுகுமார் கரூர் மாவட்ட குற்ற ஆவண காப்பகம் டிஎஸ்பியாகவும், திண்டுக்கல் போதை நுண்ணறிவு பிரிவு சிஐடி டிஎஸ்பியாக இருந்த அருள்மொழி அரசு புதுக்கோட்டை மாவட்ட இலுப்பூர் சப் டிவிஷன் டிஎஸ்பியாகவும், புதுக்கோட்டை நில அபகரிப்பு சிறப்பு பிரிவு டிஎஸ்பியாக இருந்த தினேஷ்குமார் திருவாரூர் டிஎஸ்பியாகவும், தஞ்சை மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு டிஎஸ்பியாக இருந்த சுஜித் கோவை போலீஸ் பயிற்சி மையம் டிஎஸ்பியாகவும், சேலம் நகர வடக்கு குற்றப்பிரிவில் இருந்த உதவி கமிஷனர் சரவணன் கிருஷ்ணகிரி மாவட்ட டிஎஸ்பியாகவும்,