கொரோனா இல்லாத மாவட்டமானது திருப்பூர்

கோவை: கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கோவை மாவட்டத்தை சேர்ந்த 146 பேரும், திருப்பூரை சேர்ந்த 114 பேருக்கும், நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த 14 பேரும் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் பலர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஏற்கனவே திருப்பூரை சேர்ந்த 112 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இந்த நிலையில், நேற்று மேலும் 2 பேர் குணமடைந்தனர். அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அவர்களது வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதையடுத்து திருப்பூர் மாவட்டம் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமானது.

Related Stories: