லால்குடி: லால்குடி அருகே கல்லக்குடியில் உறவினர் வீட்டில் பதுக்கிய குட்கா மூட்டையை எடுத்து வந்தபோது அமமுக சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் சிக்கினார். அவரிடமிருந்து 50 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கல்லக்குடியை சேர்ந்தவர் சவுக்கத் அலி. அம்மா மக்கள் முன்னேற்ற கழக சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர். ரைஸ்மில் வைத்துள்ளார். இவர் அப்பகுதியில் உறவினர் வீட்டில் குட்கா பதுக்கி வைத்திருப்பதாக திருச்சி மாவட்ட உணவுத்துறை அதிகாரிக்கு தகவல் வந்தது. இதையடுத்து மாவட்ட உணவுத்துறை அதிகாரி டாக்டர் சித்ரா தலைமையிலான குழுவினர் நேற்று அப்பகுதியில் உள்ள சமத்துவபுரம் அருகே சோதனையிட்டனர்.