கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் தக்காளி விலை வீழ்ச்சியால், அவை தோட்டத்திலேயே அழுகி வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, ஆலப்பட்டி, ராயக்கோட்டை, சூளகிரி பகுதிகளில் பரவலாக தக்காளி சாகுபடி செய்யட்டுள்ளது. இங்கு விளையும் தக்காளி ஆந்திராவிற்கும், தமிழகத்தில் மதுரை, கோவை, திருச்சி, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. குறிப்பாக, ராயக்கோட்டையில் உள்ள தக்காளி மார்க்கெட்டிற்கு மொத்த வியாபாரிகள் நேரடியாக வந்து, தக்காளியை கொள்முதல் செய்து எடுத்து செல்கின்றனர்.