வருசநாடு: கடமலை-மயிலை ஒன்றியத்தில் கொட்டை முந்திரி மரங்களில் கருகல் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள் கவலையில் உள்ளனர். கடமலை-மயிலை ஒன்றியத்தில் உள்ள வருசநாடு, வாலிப்பாறை, மயிலாடும்பாறை, மூலக்கடை, முத்தாலம்பாறை உள்ளிட்ட பல கிராமங்களில் கொட்டை முந்திரி விவசாயம் அதிகமாக நடைபெற்று வருகிறது. தற்போது கொட்டை முந்திரி சீசன் தொடங்கியுள்ள நிலையில், மரங்களுக்கு மருந்து தெளித்து பராமரித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக மயிலாடும்பாறை பகுதியில், கொட்டை முந்திரி மரங்களில் கருகல் நோய் ஏற்பட்டுள்ளது. இப்பாதிப்பு ஏற்பட்ட மரங்களில் உள்ள இலைகள் காய்ந்து உதிர்ந்து விடுகின்றன.