கொரோனா வைரஸ் பரவல் திரையுலகத்தையே அசைத்துப் போட்டிருக்கிறது. படத் தயாரிப்பிலும், வெளியீட்டிலும் பல மாறுதல்களை கொண்டு வர இருக்கிறது. அதற்கேற்ப உலகபுகழ்பெற்ற விருது தேர்விலும் மாற்றங்கள் கொண்டுவரப்படுகிறது. ஆஸ்கர் விருதுக்கு அடுத்தபடியாக உலகின் மிகப்பெரிய திரைப்பட விருது கோல்டன் குளோப் விருது. இந்த விருதிலும் சில விதிமுறைகள் தளர்த்தப்பட்டிருக்கிறது. தற்போதுள்ள விதிமுறைகளின்படி விருதுக்கு வரும் படங்கள் அந்தப் படம் தயாரிக்கப்படும் நாட்டில் தியேட்டர்களில் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப்பட்டிருக்க வேண்டும் என்று விதிமுறை உள்ளது.