இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் சுகாதாரத் துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், முதல் முறையாக நாட்டில் ஒரே நாளில் 1,991 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 29,465 ஆக அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதில் அதிகபட்சமாக பஞ்சாபில் 11,093, சிந்துவில் 10,771, கைபர் பக்துங்க்வாவில் 4,509, பலுசிஸ்தானில் 1,935 பேர் பாதித்துள்ளனர். இங்கு நேற்று முதல் மாலை 5 மணி வரை கடைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு இந்நாட்டு மருத்துவ நிபுணர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.