வெள்ளகோவில்: வெள்ளகோவில் அருகே தனியாருக்கு சொந்தமான நூற்பாலையில் நேற்று மதியம் ஏற்பட்ட தீ விபத்தில் நூல், இயந்திரம் மற்றும் மூலப்பொருட்கள் பொருட்கள் எரிந்து சேதமானது. திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் பொன்கருப்பசாமி நகரை சேர்ந்தவர் கதிரேசன், சிவநாதபுரத்தை சேர்ந்தவர் மூர்த்தி. இவர்களுக்கு சொந்தமான விசாகா நூற்பாலை வெள்ளகோவில் முத்தூர் செல்லும் சாலையில் செயல்பட்டு வருகிறது. இங்கு ஓபன் எண்ட் முறையில் நூல் தாயாரிக்கப்பட்டு வருகிறது. 100க்கும் மேற்பட்வர்கள் இங்கு பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில், கடந்த 43 நாட்களாக கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் நூற்பாலை மூடப்பட்டு, தொழிலாளர்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. 5 பேர் மட்டும் நூற்பாலை வளாகத்தில் இருந்தனர். தற்போது கோடை துவங்கி அக்னி வெயில் கொளுத்தி வரும் நிலையில், நேற்று மதியம் 1 மணி அளவில் நூற்பாலையில் பஞ்சு அடுக்கி வைத்த இடத்தில் இருந்து கரும் புகை வெளியேறியது. இதையறிந்த காவலாளி உடனடியாக நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். வளாகத்தில் இருந்த பணியாளர்களும் வெளியே வந்துவிட்டனர்.