தைவானில் தொடங்க இருந்த சைனீஸ் புரோபஷனல் பேஸ்பால் லீக் (சிபிபிஎல்) போட்டி, கொரோனா பீதி காரணமாக நிறுத்தப்பட்டு இருந்தது. அங்கு கொரோனா பாதிப்பு பெரிதாக இல்லாத நிலையில் ஏப்ரல் 24ம் தேதி போட்டிகள் தொடங்கின. ஆனால், ரசிகர்கள் இல்லாமல் மூடிய அரங்கிற்குள் போட்டிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் நேற்று முன்தினம் சீனா ட்ரஸ்ட் பிரதர்ஸ் - யூனி லயன்ஸ் அணிகளுக்கிடையிலான ஆட்டம் நடைபெற்றது. இந்த போட்டியில் வழக்கத்துக்கு மாறாக ரசிகர்களின் ஆரவாரம், மேளதாளம் என அமர்க்களப்பட்டது. கூடவே அரங்கம் முழுவதும் வீரர்களை வாழ்த்தி, உற்சாகப்படுத்தும் பதாகைகள், அட்டைகள் காட்டப்பட்டன. ஆனால் அரங்கிற்குள் ஒரு ரசிகர் கூட இல்லை. அனைவரும் இயந்திர மனிதர்களான ரோபோக்கள்.