ஷார்ஜா: யுஏஇ எனப்படும் ஐக்கிய அரசு அமீரகத்தின் 3வது பெரு நகரமான ஷார்ஜாவில் உள்ள 49 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அதில் குடியிருந்த 300 குடும்பங்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளன.ஷார்ஜாவின் Al Nahda பகுதியில் அமைந்திருக்கும் Abbco Tower 49 மாடிகளைக் கொண்டது. தாஜ் பெங்களூரு ரெஸ்டாரண்ட்டுக்கு அடுத்ததாக இந்த 49 மாடி கட்டிடம் உள்ளது. இங்கு இந்தியர்கள் அதிக எண்ணிக்கையில் தங்களது குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர்.