செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே அதில ஊழியர்களுடன் தொழிற்சலையை இயக்க எதிர்ப்பு தெரிவித்து போலீசாருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. செய்யாறு அருகே உள்ள மங்கல் என்ற இடத்தில் தைவான் நாட்டு காலணி தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலை 40 நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்டுள்ளது. குறைந்த அளவு பணியாளர்களை கொண்டு தொழிற்சாலையை திறக்க அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், இந்த தொழிற்சாலையில் அதிக அளவு தொழிலாளர்கள் பணிக்கு வந்ததால் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.