பெங்களூரில் ஆயிரக்கணக்கான குடிமகன்கள் நீண்ட வரிசையில் நின்று மதுபானங்களை வாங்கிக் சென்றனர். குறிப்பாக பெங்களூரில் பெண்கள் நீண்ட வரிசையில் நின்று வாங்கிச் சென்றது நாடெங்கும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. இதுகுறித்து பிரபல சினிமா இயக்குனர் ராம்கோபால் வர்மா தனது டுவிட்டரில் பெண்கள் மது வாங்க வரிசையில் காத்திருக்கும் போட்டோவை பதிவிட்டு, “மதுபானக் கடையில் யார் நிற்கிறார்கள் என்று பாருங்கள். குடிகார ஆண்களிடமிருந்து பெண்களைக் காக்க வேண்டும் என்று இப்போதும் பேசி வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.