திருமங்கலம்: திருமங்கலம் அருகே வைகை கூட்டுக்குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி வருவது பொதுமக்களிடம் வேதனையை உண்டாக்கியுள்ளது.திருமங்கலம் நகர், யூனியன் பகுதிகளுக்கு காவிரி, வைகை கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. திருமங்கலம் அருகேயுள்ள சாத்தங்குடி பகுதிக்கு வைகை கூட்டுக்குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இதற்காக சோழவந்தானிலிருந்து கருமாத்தூர், அழகுசிறை, காண்டை வழியாக பைப்லயன் அமைக்கப்பட்டு சாத்தங்குடிக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் காண்டை விலக்கு - சாத்தங்குடி இடையே உசிலம்பட்டி ரோட்டில் அமைந்துள்ள வைகை கூட்டுக்குடிநீர் திட்ட குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் கடந்த சில தினங்களாக வீணாகி வருகிறது.