புதுடெல்லி: டெல்லியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த சிஆர்பிஎப் வீரர்கள் 122 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் நேற்று முன்தினம் துணை ராணுவ படை வீரர்கள் 12 பேருக்கு கொரோனா நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவருமே மயூர் விகார் பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த 31வது பட்டாலியனை சேர்ந்தவர்கள். இந்நிலையில் இந்தப் படைப்பிரிவில் மேலும் பல வீரர்களுக்கு கொரோனா நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் 100 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.