சென்னை: தமிழக போலீஸ் டிஜிபி அலுவலகத்தில் பணியாற்றி வந்த அமைச்சுபணியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழக காவல் துறை இயக்குநர் அலுவலகத்தில் தொழில் நுட்ப பிரிவில் பணியாற்றி வந்த அமைச்சுபணியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவருடன் பணியாற்றிய அமைச்சுபணியாளர்கள் மற்றும் போலீசாருக்கு நேற்று பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.