திருவனந்தபுரம்: மத்திய அரசின் ‘நாரி சக்தி’ விருது பெற்ற கார்த்தியாயினி அம்மா முதல்வரின் நிவாரண நிதிக்காக தனது 2 மாத ஓய்வூதியத்தை வழங்கியுள்ளார். கேரள மாநிலம் ஆலப்புழா அருகே ஹரிப்பாடு பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தியாயினி அம்மா(98). இளமையில் வறுமையால் பள்ளிக்கு செல்லவில்லை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, பள்ளி செல்லாதவர்களுக்கு எழுத்தறிவு திட்டத்தை ேகரள அரசு ெகாண்டு வந்தது. இதில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, தனது 96 வயதில் கார்த்தியாயினி அம்மா சேர்ந்து படித்தார். அதில் நடந்த தேர்வில் கார்த்தியாயினி அம்மா 100க்கு 98 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தார்.