புதுடெல்லி: ஐநாவுக்கான இந்திய நிரந்தர பிரதிநிதியாக இருப்பவர் அக்பரூதின். இவர் விரைவில் ஓய்வு பெற இருப்பதையொட்டி அந்த பதவிக்கு 1985ம் ஆண்டு பிரிவை சேர்ந்த ஐஎப்எஸ் அதிகாரி டி.எஸ்.திருமூர்த்தியை நியமனம் செய்து வெளியுறவு அமைச்சகம் நேற்று உத்தரவிட்டுள்ளது.
புதிய பிரதிநிதி திருமூர்த்தி தற்போது டெல்லியில் உள்ள வெளியுறவு அமைச்சகத்தின் பொருளாதார உறவுகளுக்கான பிரிவு செயலாளராக பணியாற்றி வருகிறார். இவர் சென்னையில் பிறந்தவர். இதுபோல் சுலோவேனியா நாட்டின் இந்திய தூதராக நம்ரதா குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.