சென்னை: வளைகுடா நாடுகளில் வாழும் தமிழர்களை கப்பல், விமானம் மூலம் மத்திய அரசு அழைத்து வர வேண்டும் என்று மத்திய அரசுக்கு கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வளைகுடா நாடுகளில் ஏறத்தாழ 85 லட்சம் இந்தியர்கள், குறிப்பாக தமிழகம், கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். எனவே, இந்திய தொழிலாளர்களை முறையான மருத்துவ பரிசோதனை செய்து அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்று முடிவு தெரிந்த பிறகு தனி விமானங்கள் மூலம் இந்தியாவிற்கு திரும்ப அனுப்பவேண்டும் என்று ஐக்கிய அரபு அமீரகத்துக்கான இந்திய தூதரிடம் முறையிட்டுள்ளனர்.