வாஷிங்டன்: கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நாள்தோறும் செய்தியாளர்களை சந்தித்து வருகின்றார். நேற்று முன்தினம் செய்தியாளர்களை சந்தித்த அதிபர் டிரம்ப் கூறியதாவது: கொரோனா வைரஸ் பரவலை ஆரம்பக் கட்டத்திலேயே சீனா தடுக்க தவறியது தான் 184 நாடுகள் நரகத்திற்கு செல்ல வழிவகுத்துள்ளது. நோய்தொற்றான கண்ணுக்கு தெரியாத எதிரியை உலகளாவிய அளவில் சீனா பரப்பியுள்ளது. அதற்கு எதிரான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. நோய் தொற்று காரணமாக ஏற்பட்ட இழப்புக்களுக்காக 140மில்லியன் டாலரை இழப்பீடாக சீனாவிடம் கேட்பதற்கு ஜெர்மனி திட்டமிட்டுள்ளது.