புதுடெல்லி: உத்தரப் பிரதேச பொது மருத்துவ கல்வி இயக்குனர் எழுதிய கொரோனா தடுப்பு நடவடிக்கை கடிதத்தை மேற்கோள் காட்டி காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று இந்தியில் டிவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: உத்தரப் பிரதேச மருத்துவக் கல்லூரிகளுக்கு தரம் குறைந்த தனிநபர் பாதுகாப்பு உடைகள் (பிபிஇ) விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இந்த உடைகள் கொள்முதல் செய்யப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது. தரம் குறைந்த உடைகள் என்பது கண்டறியப்பட்டு திரும்ப பெறப்பட்டுள்ளது. இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பல டாக்டர்களின் உயிர் காக்கப்பட்டுள்ளது.