புதுடெல்லி: யெஸ் வங்கி ஊழல் வழக்கில் டிஎச்எப்எல். இயக்குனர்கள் கபில் வாதவான், தீரஜ் வாதவான் ஆகியோரை சிபிஐ காவலில் எடுத்து விசாரித்து வருகிறது. யெஸ் வங்கி 2018ம் ஆண்டு டிஎச்எப்எல். நிறுவனத்துக்கு ₹3,700 கோடி கடன் வழங்கியது. அதேபோல, தீரஜ் வாதவான் இயக்குனராக உள்ள ஆர்கேடபிள்யூ. டெவலப்பர்ஸ் நிறுவனத்துக்கு ₹750 கோடி கடன் வழங்கியது. இதற்கு ரூ.600 ேகாடி வரையில் முதலீடாக லஞ்சம் கைமாறியுள்ளதாக சிபிஐ அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தது.