நெல்லை: 144 தடை உத்தரவால் நெல்லையில் எளிய முறையில் திருமணம் செய்துகொண்ட மணமக்களை உறவினர்கள் வீடியோ கான்பரன்சில் வாழ்த்தினர். நெல்லை டவுனைச் சேர்ந்த வரத சுப்பிரமணியன்- கோமதி தம்பதி மகன் சதீஷ்குமார் (29). ஆழ்வார்குறிச்சி ஆறுமுகம்- நாகலட்சுமி தம்பதி மகள் சித்ரா (24). இவர்களது திருமணம் 2 மாதங்களுக்கு முன்னர் நிச்சயிக்கப்பட்டது. நெல்லை டவுனில் உள்ள ஒரு கோயிலில் அட்சய திரிதியையுடன் கூடிய முகூர்த்த நாளான இன்று திருமணம் நடத்த ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால் மார்ச் 24 நள்ளிரவு முதல் கொரோனா தொற்று பரவலை தடுக்க 144 தடையுத்தரவு போடப்பட்டு, மே 3ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது. இதற்கிடையே இன்று நெல்லை மாநகரில் முழு ஊரடங்கும் அமலில் உள்ளது. இதனால் மணமகள் மற்றும் அவரது பெற்றோர், ஆழ்வார்குறிச்சி விஏஓவிடம் முறைப்படி அனுமதி பெற்று நேற்றே நெல்லை வந்துவிட்டனர்.