தஞ்சை கலெக்டரின் வங்கி கணக்கில் உண்டியல் பணத்தை கொரோனா நிதியாக செலுத்திய மாணவன்

பேராவூரணி : தஞ்சை கலெக்டரின் வங்கி கணக்கில், தனது உண்டியல் பணத்தை கொரோனா நிதியாக செலுத்திய மாணவனின் செயலை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர். பேராவூரணி அருகே உள்ள புனல்வாசல் வடக்குத் தெருவை சேர்ந்தவர் லாரன்ஸ்சேவியர் மாற்றுத்திறனாளி (32) . இவரது மனைவி கிளாரன்ஸ்மேரி(28). இவர்களது மகன் கேப்ரிக் (5). புனல்வாசல் கிராமத்தில் உள்ள ஒரு பள்ளியில் 1 ம் வகுப்பில் படித்து வருகிறார். இவர் தனது உண்டியலில் திருவிழா செலவிற்காக சேமித்து வைத்திருந்த ரூ.1,125 யை தமிழக முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்காக தஞ்சை மாவட்ட கலெக்டரின் வங்கி கணக்கில், தனது தந்தையின் உதவியுடன் செழுத்தி உள்ளார். மாணவன் கேப்ரிக்கிற்கு, புனல்வாசல் கிராம மக்கள் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.

Related Stories: