லக்னோ: பிரதமர் மோடியை விமர்சித்து பேசிய பாஜவை சேர்ந்த எம்எல்ஏ.விடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், சீதாப்பூர் தொகுதியைச் சேர்ந்த பாஜ எம்எல்ஏ ராகேஷ் ரத்தோரி. நேற்று முன்தினம் ரத்தோரி பேசிய ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த ஆடியோவில், பாஜ எம்எல்ஏ ரத்தோரி, உள்ளூரைச் சேர்ந்த பாஜ தலைவர் ஜே.பி.சாகு என்பவருடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார். இதில், ‘‘பிரதமர் மோடி மக்களை கைகளை தட்ட சொல்வதும், மணி அடிக்க சொல்வதும் முற்றிலும் தவறான ஒன்றாகும். கைகளை தட்டுவதன் மூலமாக கொரோனாவை விரட்டி விட முடியுமா? உங்களை போன்றவர்கள் முட்டாள்கள்.