குடியாத்தம்: குடியாத்தம் அருகே யானைகள் விவசாய பயிர்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்தன. இதுகுறித்து தகவலறிந்து வந்த வனத்துறையினர் யானைகளை விரட்டி அடித்தனர். வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் யானைகள் கூட்டமாக புகுந்து அட்டகாசம் செய்து வருவது வாடிக்கையாகி வருகிறது. இந்நிலையில், குடியாத்தம் அடுத்த கொட்டாமிட்டா பகுதியில் 2 குட்டி யானைகள் உட்பட 7 யானைகள் திடீரென நேற்றுமுன்தினம் இரவு அங்குள்ள மாந்தோட்டத்தில் புகுந்தது. 25க்கும் மேற்பட்ட மாமரங்களின் கிளைகளை முறித்து அட்டகாசம் செய்தது.