கள்ளக்குறிச்சி: கொரோனா பரவுவதை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் தியாகதுருகம் சாலை பகுதியில் செயல்பட்டு வந்த உழவர் சந்தை கள்ளக்குறிச்சி பேருந்து நிலையம் வளாகத்தில் செயல்பட தொடங்கியது. விவசாயிகள், சிறு வியாபாரிகள் சமூக இடைவெளியுடன் கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வந்தனர். ஆனால் தற்போது கடை வியாபாரிகள் அதிகரித்ததால் நெருக்கடியான இடத்தில் சமூக இடைவெளி இல்லாமல் ஆங்காங்கே கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நெருக்கடியான இடத்தில் உள்ள கடைகளில் பொதுமக்களும் பாதுகாப்பற்ற நிலையில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கூட்டம் கூட்டமாக நின்று கொண்டு காய்கறிகள் வாங்கி வருகின்றனர்.