காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 5 பேரூராட்சி பகுதிகளை 3 மண்டலங்களாகப் பிரித்து, அதன் அடிப்படையில் வாரத்தில் 2 நாட்கள் மட்டும் வெளியில் வர அனுமதி அளித்து மாவட்ட கலெக்டர் பொன்னையா நடவடிக்கை எடுத்துள்ளார். இதுகுறித்து காஞ்சிபுரம் கலெக்டர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரே நகராட்சியான காஞ்சிபுரம் பெருநகராட்சி 6 மண்டலங்களாக பிரிக்கப்பட்டது. 9 வார்டுகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு அப்பகுதி மக்கள் வெளியே வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மற்ற 42 வார்டுகள் 5 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு அப்பகுதி மக்களுக்கு வண்ண கார்டுகள் வழங்கப்பட்டு வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே வெளியே வரவேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் மருத்துவசேவை போன்ற மிக முக்கியமான தேவைகளுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள வாட்ஸ்அப் எண்களை தொடர்பு கொள்ளலாம். குன்றத்தூர் 7824058573, மாங்காடு 7824058576, ஸ்ரீபெரும்புதூர் 7824058580, உத்திரமேரூர் 7824058584, வாலாஜாபாத் 7824058585.