சென்னை: கீழ்ப்பாக்கம் மற்றும் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் தொற்றுக்காக சிகிச்சை பெற்று வந்த 31 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர். சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்காக சிறப்பு தனி சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டது. இங்கு, டீன் வசந்தாமணி தலைமையில் டாக்டர்கள் குழுவினர் தொடர் கண்காணிப்பில் சிகிச்சை அளித்து வருகின்றனர். கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் கொரோனா வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்ட 21 பேர் இங்கு சிகிச்சை பெற்று வந்தனர். தீவிர சிகிச்சைக்கு பிறகு இவர்களில் 10 பேர் முழு குணமடைந்தனர். அதை தொடர்ந்து, நேற்று இவர்கள் 10 பேரும் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.