குன்னூர்:குன்னூர் வனப்பகுதிகளில் இருந்து குடியிருப்பு பகுதிக்கு வந்த கொண்டை வல்லூறு குஞ்சு ஒன்றை பெண் ஒருவர் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தார்.குன்னூர் அருகே தனியாருக்கு சொந்தமான உமரி காட்டேஜ் எனும் பகுதி உள்ளது. நேற்றுமுன்தினம் இப்பகுதியில் காக்கை கூட்டம் ஒரு பறவையை குஞ்சு ஒன்றை விரட்டி,விரட்டி கொத்தியதை அப்பகுதி பெண் ஒருவர் பார்த்துள்ளார். காக்கைகளை விரட்டிய அவர் கழுகு போன்றிருந்த அந்த பறவை குஞ்சினை மீட்டு வீட்டில் பாதுகாப்பாக வைத்துள்ளார். பின்னர் நேற்று தீயணைப்பு துறையினரிடம் ஒப்படைக்க அதனை எடுத்து வந்தார். தீயணைப்பு துறையினர் வனத்துறைக்கு தகவல் அளிக்கவே, குன்னூர் வனத்துறையினர் நேரில் வந்து அதனை பெற்றனர்.