சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கம் தற்போது தமிழக அரசு நியமித்த தனி அதிகாரியின் கீழ் செயல்பட்டு வருகிறது. இதனால் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட நாடக நடிகர், நடிகைகளுக்கு சில நடிகர்கள் தனிப்பட்ட முறையில் உதவி செய்து வருகிறார்கள். இதுதொடர்பாக சங்கத்தின் சிறப்பு தனி அதிகாரி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தற்போது கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது. இதனால் தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்கள் பலர் வேலைவாய்ப்பு இழந்துள்ளனர். எனவே, தென்னிந்திய நடிகர் சங்க வங்கி கணக்கில் நிதி உதவி செய்யுமாறு வேண்டுகோள் வைக்கப்பட்டது.