புதுடெல்லி: `மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் கொரோனா பாதிப்பால் சிக்கி தவிக்கும் இந்திய தொழிலாளர்களை திரும்ப அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்று ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார். இந்தியா மட்டுமின்றி சவுதி அரேபியா, ஏமன், குவைத், ஈரான், ஈராக் உள்ளிட்ட மத்திய கிழக்கு ஆசியா நாடுகளிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால், அங்கு வேலையின்றி தவிக்கும் இந்திய தொழிலாளர்களை தாய் நாட்டுக்கு திரும்ப அழைத்து வர மத்திய அரசுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.