திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அருகே வர்க்கலாவில் நேற்று முன்தினம் ேபாலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் குடிபோதையில் வந்துள்ளார். மதுகடைகள் மூடப்பட்டுள்ள நிலையில் அவருக்கு எங்கிருந்து மது கிடைத்தது என போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. தொடர்ந்து அந்த வாலிபரிடம் விசாரித்தபோது, அப்பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் மது வாங்கியதாக தெரிவித்தார். இதையடுத்து போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். அப்போது வர்க்கலா பகுதியை ேசர்ந்த சஜின்(37) என்பவர் மது விற்பனை செய்தது தெரியவந்தது. பின்னர் போலீசார் அவரை கைது செய்தனர்.