இந்திய கால்பந்து அணி நட்சத்திர வீரர் ஜெஜே லால்பெகுலா (29 வயது). ஊரடங்கு அமலில் உள்ளதால் ரத்த வங்கிகளில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே, மனித நேயத்துடன் ரத்த தானம் செய்து ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். இது குறித்து ஜெஜே கூறியதாவது: மிஸோரம் சைனாட் மருத்துவமனையில் உள்ள ஒரு நோயாளிக்கு அவசரமாக ரத்தம் தேவை என்ற தகவல் யங் மிஸோ சங்கம் மூலமாக எனக்கு கிடைத்தது. இது போன்ற சமயங்களில் எதுவும் செய்யாமல் உட்கார்ந்திருக்க முடியாது. உடனடியாக மருத்துவமனைக்கு சென்று ரத்தம் கொடுத்தேன்.