சென்னை: கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை கையாளும் முறையை வெளியிடப்பட்டுள்ளது. சீனாவில் தொடங்கி உலகை உலுக்கிய கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனிடையே கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய மாநில அரசுகள் தீவிர முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. அதன் அடிப்படியில் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் சுகாதாரத்துறைபலவேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறது. நேற்று பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தும் விதிமுறைகளை அரசு வெளிடியிட்டது. இந்நிலையில் கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை கையாளும் முறையை சுகாதாரத்துறை வெளியிட்டது.